சேலம்: சேலம் பெரமனூரை சேர்ந்த 31 வயது இளம்பெண், செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடையில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரது தாய் கேட்டபோது, வேலை செய்யும் இடத்தில் தன்னிடம் 3 பேர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், அடிக்கடி இடித்து விட்டு செல்வதாகவும் கூறி அழுதார். இதுகுறித்து நேற்று செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.