லிஸ்பன்: போர்ச்சுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் அன்டோனியோ காஸ்டா தனது பதவியை தக்க வைத்துள்ளார். ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் அன்டோனியோ காஸ்டா தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில், 41.7 சதவீத வாக்குகளை பெற்ற சோசலிஸ்ட் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சபையில் மெஜாரிட்டிக்கு இன்னும் 4 இடங்கள் தேவை என்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. பிஎஸ்டி கட்சிக்கு 76 இடங்கள் அதிகமான இடங்களில் கிடைத்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் அன்டோனியோ காஸ்டாவை ஆட்சி அமைக்க வரும்படி அதிபர் ரிபெல்லோ டி சோ முறைப்படி அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.