புதுடெல்லி, ஜன. 29: இந்தியாவிடம் இருந்து ரூ.2,800 கோடிக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தியா-ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. சூப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்த இதை, கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், விமானம் அல்லது நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய - சீன எல்லை பகுதிகளான லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த ஏவுகணைகள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன.