சென்னை: தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். சனிக்கிழமையான நாளையும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி மாலை 5 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாளாகவும்.