நாகை: உப்புநீரை பூமிக்கடியில் செலுத்துவதால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக குத்தாலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவன சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையமானது செயல்பட்டு வருகிறது. அங்கு கெட்ட உப்புநீரை 1800 மீட்டர் ஆழத்தில் ராட்சத போர்கள் மூலம் பூமிக்கடியில் செலுத்துவதால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உபரிநீராக மாறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.