தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஒன்றிய அரசுக்கு அவமானமில்லையா? டிடிவி.தினகரன் கேள்வி

சென்னை:  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவு: ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல், இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற் கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நம்முடைய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா. இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை.

Related Stories: