சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நேற்று மாலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் உச்சகட்டமாக இந்திய ஆட்சிப்பணி 1954ம் ஆண்டு சட்டத்தை திருத்த முயற்சி செய்கின்றனர். மோடி செய்யும் இந்த செயல்களால் ஒன்றிய மாநில அரசுகளின் உறவு என்ற பாலம் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது. நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் மீது மதமாற்றம் சம்பந்தமாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். முதலில் நடிகை குஷ்பு எவ்வாறு மதம் மாறினார் அல்லது அவருடைய முன்னோர் எவ்வாறு மதம் மாறினார்கள் என்பதை முதலில் அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.