நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,820 இடங்களிலும் தனித்துப் போட்டி!: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,820 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு நாம் சந்திக்கும் நிகழ்வு, வெற்றி நிகழ்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: