சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை 45 நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை - தாம்பரம் இடையே இறுமார்க்கத்திலும் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 1 மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை இல்லாததால் அலுவலக பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.