சென்னை: சென்னை, தி.நகரில் இயங்கி வந்த சூரியா எஸ்டேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெற்று முதிர்வு அடைந்த பின்னரும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தராததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் காவல் துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை, பொருளாதரக் குற்றப்பிரிவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.