சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இலந்தகுளம் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் நள்ளிரவில் கருப்பசாமி(23) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கருப்பசாமியை கொன்றுவிட்டு தலைமறைவான கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.