மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் கிராமத்தில் சித்தேரி, பெரிய ஏரி என்று இரண்டு ஏரிகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரிய ஏரி மதகு உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்ைக எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த ஏரியை நம்பி பாசன வசதி பெறும் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.