பாலியல் தொல்லை தந்த தந்தை கைது 16 வயது மகள் 8 மாத கர்ப்பம்

சென்னை: சென்னை அடுத்த காரனோடை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (38), சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏழுமலையின், மனைவி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 13 வயது மகள் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார். மற்றொரு 16 வயது மகள் தந்தையுடன் இருந்துள்ளார். அப்போது, ஏழுமலை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். நேற்று 16 வயது மகளுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், தாய் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, தந்தை ஏழுமலை பாலியல் தொந்தரவால் தான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை நேற்று கைது செய்தனர்.

Related Stories: