நீலகிரி: உதகை அருகே செயல்பட்டு வரும் முத்தூட் நிதிநிறுவன ஊழியர்கள் 4 பேர் 380 சவரன் அசல் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து 98 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் பிரபல தனியார் நிதிநிறுவனமான முத்தூட் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். இதில் அடகு வைத்த நபர் ஒருவர் நகையை மீட்டு விற்பனை செய்ய முயன்ற போது, கவரிங் நகையாக இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளர் ராஜு, காசாளர் நந்தினி, விஜயகுமார் மற்றும் சத்யபிரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து அடகு வைத்து, அசல் நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை மாற்றி வைத்தது தெரியவந்தது.