டெல்லி : மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகளுடன் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனையைச் செய்து, தனிமைப்படுத்தல் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.