காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அதிகாம் கிராமத்தில் தேவ்சர் பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு அதிகாரி உட்பட 5 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலியும் காயம் அடைந்தார். நேற்று மாலை கதுவா மாவட்டம் பில்லவர் தாலுகாவில் உள்ள கோக்-மண்ட்லி கிராமத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் ஏட்டு கொல்லப்பட்டார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: