சிலி: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆல்டிபிளானோ நகராட்சியில் உள்ள ஏழைகள் வாழும் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் இக்கூ என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். இங்கு திடீரென பயங்கர தீ பிடித்தது. சிறிது நேரத்தில் குடியிருப்புகளை கபளீகரம் செய்த தீ பல வீடுகளை சாம்பலாக்கியது. மரபலகைகளால் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தால் மிக வேகமாக தீ பரவியது. வீடுகளில் இருந்த உடைமைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.