பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கல் பருண் குமார் சின்கா தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரம் குறித்து என்ஐஏ போன்ற சிறப்பு விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றம் பொருத்தமானது என கருதும் வேறு பிற விசாரணை அமைப்புகள் மூலமோ முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறி உள்ளார்.