திருத்தணி: திருத்தணியில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, தூதூர் கிராமம் சேர்ந்தவர் சிவகுமார்(43). இவர் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு செல்வதற்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார். அதன்படி இவர் உள்பட சிலர் வேன் ஏற்பாடு செய்து முருகன் கோயில்களுக்கு செல்ல தீர்மானித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேனில் ஏராளமான பக்தர்களுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தார். அப்போது, தலையாறிதாங்கல் அருகே வந்தபோது, நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படவில்லை.