தேனி: நீதிமன்ற உத்தரவுப்படி ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறான தகவல் தந்த புகாரில் வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலானி என்பவரது வழக்கில் தேனி சிறப்பு நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி ஓ. பன்னீர் செல்வம்- அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக புகாா் எழுந்தது. தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மற்றும் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வேட்பு மனுவில் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்துள்ளனர்.