சென்னை குறைந்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை Jun 04, 2021 குறைந்து கொரோனா தொற்று தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை முதல்வர் கெ ஸ்டாலின் முதல் அமைச்சர் சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11.3.0 மணிக்கு தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. கொரோனா அதிகம் பரவும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 1 முதல் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்பூலன்ஸ் செல்ல மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. … The post குறைந்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு