சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துறைமுகம் பகுதியை சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு எனக்கும் சதீஷ் (எ) பபுலு என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றோம். இந்நிலையில்வர் சதீஷ் இன்ஸ்டாகிராமில் எனது படத்தை பலரிடம் பணம் பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவருடைய மனைவி என்று சொல்வி பண மோசடியில் ஈடுபடுகிறார்.