சென்னை: 27% ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. வழக்கில் வெற்றி பெற உதவிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கும் நன்றி என்றும் மேலும் ஓ.பி.சி. இடஒதுக்கீட்ட்டுக்காக போராடிய அனைத்து தலைவர்களுக்கும் நன்றி எனவும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்திருக்கிறது.