மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா, தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தலைமை வகித்தார். கூட்டம் முடிந்ததும் மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘‘‘மதுரையில் ஜனவரி 12ம் தேதி பாஜக ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார்.