சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஊழியர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. நடப்பாண்டில் கரும்பு மகசூல் அதிகரித்ததையடுத்து 60,000 டன் பதிவு செய்யப்பட்ட கரும்புகளும், 17,000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகளும் அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆலையின் பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம் ஆகியவற்றிற்கு பத்து கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆலை ஊழியர்களின் ஊதியத்திற்கு ரூ.11 கோடியே 16 லட்சம் தேவைப்படுவதாகவும் ஆலை நிர்வாகம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.