தஞ்சை : குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி தலையில் காலி குடங்களை சுமந்து வந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவோணம் ஒன்றியம் நெய்வேலி வடபாதி விபத்தை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் நெய்வேலி வடபாதி ஊராட்சியை சேர்ந்தது நரிப்பத்தை கிராமம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவுக்கு குடிநீர் தொட்டி ஒன்று மட்டும் மேலத்தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. கீழத்தெருவிற்கு குடிநீர் வருவதில்லை. இதனால் கீழ் தெருவில் வசித்து வரும் 30 குடும்பங்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.