குன்னூர் : ஒமிக்ரான் தொற்று எதிரொலியாக குன்னூரில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வருவாய் துறையினர் சார்பில் 9 குழு அமைத்து முகக்கவசங்கள் அணியாமல் வரும் நபர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று காரணமாக தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகிறது. பொது மக்கள் கூடும் இடங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தி வருகின்றது.