திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் பூஜைகள் தொடங்கின. தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், தரிசன நேரமும், நெய்யபிஷேக நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி வரை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் இரவு 1 மணி நேரம் கூடுதலாக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.