சென்னை: விபத்து இல்லாமல் புத்தாண்டு கொண்டாடியதால் பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டு தினம் தமிழகம் எங்கும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.