மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

அண்ணா நகர்: நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (45), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், நேற்றுமுன்தினம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவரிடம் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பீச், சினிமாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே, அந்த வாலிபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து, ஆய்வாளர் உமா மகேஸ்வரி சிறுமியிடம் விசாரணை நடத்தி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் மணிபாலன் (எ) ரிசியை (21) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: