காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூலில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. முன்பு 1990ம் ஆண்டுகளில் இருந்தது போன்று அந்த அமைப்பினர் பெண்களுக்கு படிப்படியாக தடை விதித்து வருகின்றனர். மேலும், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகள் பலவும் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.