சென்னை: கேரளாவில் பேருந்து ஓட்டுனரை தாக்கும் வீடியோவை, தமிழகத்தில் ஓட்டுனர் மீது தாக்குவது போல் தவறான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பேருந்து ஓட்டுனரை கல்லூரி மாணவர்கள் சிலர் வழிமறித்து கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே ஒரு விதமான மன பகமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.