டெல்லி: இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 578 ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. டெல்லியில் தான் மிக அதிகபட்சமாக 142 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 141 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3-வது இடத்தில் கேரளா மாநிலத்தில் 57 பேருக்கும் குஜராத்தில் 49 பேருக்கும் ராஜஸ்தானில் 43 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34.