பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது லீக் போட்டியில், உ.பி. யோத்தா-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 36-35 புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா த்ரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தெலுங்கு டை்டன்ஸ் 20-14 என முன்னிலை பெற்றது. ஆனால் 2வது பாதியில் சிறப்பாக ஆடிய புனேரி பால்டன், 20 புள்ளிகளை சேர்த்தது. முடிவில் 34-33 என்ற புள்ளி கணக்கில் புனேரி அணி வெற்றி பெற்றது. இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடந்த 12வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.