ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 25 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் இரவு- பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியிலிருந்து ஜவுளகிரி பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு 25 யானைகள் சென்ற நிலையில், மேலும் 25 யானைகள் ஓசூர் வனப்பகுதியான சானமாவு காட்டில் முகாமிட்டுள்ளன. யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதால், அவற்றால் உயிர்சேதம் மற்றும் பயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.