ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு அவரது தாயார் அற்புதம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி அவருக்கு கடந்த மே மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.