கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அவரின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 22ம் தேதி அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிறுமிக்கு மருத்துவர்கள் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிறுமி நேற்று உயிரிழந்தார்.

Related Stories: