திண்டுக்கல்: திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் வார்டு வாரியாக பள்ளி மாணவர்களை போன்று அதிமுக நிர்வாகி எடுத்த அட்டனன்சுக்கு நிர்வாகிகள் கைகளை உயர்த்தி தங்கள் வருகையை பதிவு செய்த வினோதம் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவிக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.