மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு ஒன்று நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த சில தினங்களாக காட்டு மாடு ஒன்று நடமாடி வருகிறது. இதனால் தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை கண்டால் விரட்டுவதாக கூறுகின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.