திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளை 24 தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு என ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் என தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளது.
ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்கள் 25ம் தேதி காலை 9 மணிக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடப்பட உள்ளது.