இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஷிப்லி பராஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் ஷிப்லி பராஸ் காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.