ஹாங்காங்: ஹாங்காங்கில் சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்திய பின் முதல் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர்கள் தான் அதிகம் வெற்றி வெற்றுள்ளனர். இது தொடர்பாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறுகையில், ‘‘இந்த தேர்தலில் 30.2 சதவீதம் வாக்குகள் மட்டும் தான் பதிவாகி உள்ளது. இருந்தபோதிலும் இது திருப்தி தருவதாக உள்ளது. 1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து நடந்த தேர்தல்களிலேயே மிக குறைவான வாக்குப்பதிவு இதுவாகும். இந்த தேர்தலில் 13.5 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இவர்கள் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கவில்லை. மேம்படுத்தப்பட்ட தேர்தல் முறைக்கு ஆதரவு அளித்துள்ளனர் என நான் நினைக்கிறேன்” என்றார்.