புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை கழிப்பறை கட்டப்பட்டுள்ளது?. என்ற கேள்வியை திமுக எம்பி ராஜேஷ்குமார் நேற்று மாநிலங்களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், ‘தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக ஒரு கட்டிடத்திற்கு என்று 1 லட்சத்து 26ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனை மாநிலங்கள் திட்டத்தில் இருக்கும் வேறு கட்டிடங்களுடன் கூட இணைத்து செயல்படுத்திக் கொள்ளலாம்.