டெல்லி: டெல்லியில் பொதுமக்கள் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றால் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் டெல்லியில் உயர்ந்துள்ளது. இதனால், மூன்றாவது அலை ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.