உலகம் 60 மீட்டர் அகலம்; 15 மீட்டர் ஆழம்!: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவான பெரும் பள்ளம்..மக்கள் வியப்பு..!! Jun 03, 2021 மெக்ஸிக்கோ சாண்டா மரியா மத்திய மெக்சிகோ… மெக்சிகோ: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவாகியுள்ள மிகப்பெரிய பள்ளம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய மெக்சிகோவில் உள்ள சாண்டாமரியா என்ற இடத்தில் இந்த பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. சுமார் 60 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த பள்ளத்தை காண ஏராளமானோர் அங்கு விரைந்துள்ளனர். பசுமையான வயலில் இவ்வளவு பெரிய பள்ளம் எப்படி உருவானது என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மெக்சிகோ நகரத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் உருவாகும் போது யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என மெக்சிகோவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. நீர்க்கோள் படுகை எனப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு முறை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலத்தில் பாறைகளின் இடையே பாயும் நிலத்தடி நீரால் உருவான அழுத்தத்தால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பள்ளம் ஏற்பட்ட போது யாரும் வயலில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. … The post 60 மீட்டர் அகலம்; 15 மீட்டர் ஆழம்!: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவான பெரும் பள்ளம்..மக்கள் வியப்பு..!! appeared first on Dinakaran.
மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்