பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் பாஜவினருக்கு கட்சி சார்ந்த பணிகள் குறித்து 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென்று பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்து எல்லையம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மனை தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.