சென்னை: வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.19-ல் வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிச. 20, 21-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.