காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிபின் ராவத்துக்கு பிரம்மாண்ட கட் அவுட்: மரியாதை செலுத்திய தலைவர்கள்!!...

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவதிற்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முப்படைகளின்   தலைமை தளபதி  பிபின் ராவத்தை பெருமைப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிபின் ராவதின் புகைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொது கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேச வெற்றி விழாவிற்கான அழைப்பிதலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படாததை சுட்டிக்காட்டியதுடன், ஒன்றிய அரசு உண்மையை கண்டு அஞ்சுவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா காந்தி வங்கதேச வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்களில் இந்தியாவில் ஒரே பெண் பிரதமர் பாஜக - வால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த நாட்டில் பெண்கள் உங்களுக்கு உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: