சென்னை: சென்னையில் பப்ஜி விளையாடுவதற்காக பெற்றோருக்கு தெரியாமல் சிறுவர்கள் 8 லட்சம் ரூபாய் பணத்தை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்திவருபவர் நடராஜன். இவரது ஒரு மகன் 10 ஆம் வகுப்பும், மற்றொரு மகன் 12 ஆம் வகுப்பும் வருகின்றனர். நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து மகன்களை விசாரித்து உள்ளார்.