ராஜபாளையம்: ராஜபாளையம் தேவதானம் அருகே உள்ள அசையாமணி விளக்குப் பகுதியில் ராமேஸ்வரன் வீடு உள்ளது. இந்த வீட்டு பின்புறம் உள்ள பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரன் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சமூகநல வனவிலங்கு ஆர்வலர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சாஸ்தா கோயில் வனப்பகுதியில் விடப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது பெய்த மழையின் காரணமாக குளங்கள், கண்மாய்கள் நிறைந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மலைப்பாம்பு மற்றும் பாம்புகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.